சித்தர்கள் அருளிய எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில், நாக பாம்பானது கடித்து விஷம் தலைக்கேறி விட்டால் அந்த விஷத்தை இறக்கும் மந்திரம் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம். நம்புவதற்கு அரிதான இந்த தகவலை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் விஷம் இறங்க ஒரு மந்திரத்தை பின் வருமாறு கூறுகிறார். சித்தியுள்ள நாகமதின் வித்தையப்பாதெளிந்துகொண்டு மனதுறுதி யாகப்பாருகொல்லென்ற கூத்துவனார் லபியினாலேகொடுமையென்ற விஷமேறித் தலைமேற்கொண்டாசொல்லென்ற சொல்லதினால் மைந்தாமைந்தாசுகமாகத் தீருதற்கு மந்திரங்கேளு வில்லென்ற விசைபோலே விஷத்திற்பாய்ம்விசையாக அங்கிலிசிங் நசிநசியென்னே.யெண்ணியுரு அருபதிலே விஷந்தான்தீரும்யென்மகனே உறுதிகொண்டு இருந்துபாருபுத்தியுட னாயிரத்தெட் டுறுவேசெய்தால்ஆதிதொடுத் தந்தமந்திரம் சித்தியாமே. ஒருவரை நாக பாம்பு தீண்டி விஷம் அவர உடலெங்கும் பரவி தலைக்கேறி விட்டால், அவர் அருகில் அமர்ந்து"அங்கிலி சிங் நசி நசி"என்ற மந்திரத்தை அறுபத்தி நான்கு தடவை தொடர்ந்து உச்சரிக்க உடலில் பரவிய விஷம் இறங்கிவிடும் என்கிறார். இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டியது அவசியம். "அங்கிலி சிங் நசி நசி" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகுமாம். இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டது. எனவே இதனை ஒரு தகவலாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
Pages
அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?
3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...
0 comments:
Post a Comment