அகத்தியர் அருளியது, காணவே யின்னமொரு சூட்சங்ககேளுகருணையுட னுலத்தோடிருக்கும் போதுபூணவே கண்ணாரக் கண்டபாவம்புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்பேணவேகாதாரக் கேட்டபாவம் பெண்வதைகள் கோவதைகள் செய்தபாவம் ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம் ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளகாரப்பா கருணைவிழி மனக்கண்ணாலேகாலறிந்து யோகமதால் அங்லங்கென்றுநேரப்பா நிலையறிந்து நிலையில்நின்றுநீ மகனே நூற்றெட்டு உருவேசெய்தால்வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம்வெகுகோடி பாவமெல்லாம் விலகுந்தான அகத்தியர் பரிபூரணம் 1200 நூலில் இருந்துஉங்களின் பாவங்கள் நீங்க ஒரு சூட்சமத்தை சொல்கிறேன் கேளுங்கள், நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் யாருக்கும் எந்த பாவமும் செய்யாதிருந்தபோதிலும் உங்கள் வாழ்வில் பாவங்கள் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அது எப்படி என்றால் ஒருவன் செய்யும் பாவச்செயலை கண்டும் அதை தடுக்காமல் போவதும்( கண்ணாரக் கண்டபாவம்), தீய சொற்களையும், தீயவர்களின் வஞ்சகப்பேச்சுகளை, அவச்சொற்களை கேட்பது(காதாரக்கேட்டபாவம்) உங்கள் மனமகிழ்ச்சிக்காக பிறரை துன்புறுத்துவது(மனதாரச் செய்தபாவம்) பெண்களை கொடுமைப்படுத்து, பசுக்களை துன்புறுத்துவதுஓரறிவு முதல் ஆரறிவு வரையிலான உயிர்களை கொன்ற பாவங்கள் உங்களின் முன்னோர்கள் செய்த பாவமென எத்தனை கோடிப்பாவங்கள் இருந்தாலும் அவைகள் நீங்க ஒரு சூட்சம மந்திரத்தைசொல்கிறேன்கேளுங்கள். உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில் மான்தோல் விரித்து (இன்றைய நிலையில் அது சாத்தியம் இல்லை என்பதால் அதற்கு நிகர் கம்பளியை விரித்து வடமேற்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக இழுத்து அடக்கிக்கொண்டு மனஓர்நிலையோடு மனதினுள் ஓம் அங் லங்" என்ற மந்திரத்தை 108 -உரு செபிக்க வேண்டும். இப்படி செபிப்பதால் உயிரைக்கொன்ற பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும்விலகி விடும் என்கிறார் அகத்திய மாமுனிவர்
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
Pages
அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?
3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...
0 comments:
Post a Comment