3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக்குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.இப்போது மூன்றே நாளில் தொப்பையைக்குறைக்க உதவும் ஜூஸ் செய்வதை பற்றி பார்ப்போம். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப்பொருளும் ஒன்று இது. எலுமிச்சைஎலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக்கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும். புதினாபுதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக்கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். இஞ்சி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனிதஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக்கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம். தண்ணீர் தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக்குறைக்கும்.குறிப்புமேற்கூறிய பொருட்களைக்கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம்.அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.ஜூஸ் செய்யும் முறைவெள்ளரிக்காய்- 1எலுமிச்சை- 5புதினா இலைகள்- 15டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி- 2தண்ணீர்- 2.5 லிட்டர்வெள்ளரிக்காய், 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக்கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக்காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.
சத்தி கணபதி மந்திரம்
Author: Sabtharishi / Labels: அகத்தியர்ஓம் சிவ சுதாஓம் சத்தி சுதா ஓம் சித்தி புத்திர காதலா ஓம் வல்லபை பிரியா ஓம் சரவணபவ ஜேஸ்டா ஓம் சர்வா பீஸ்ட ஹாத ஓம் கணபதே நம நம ஓம் கீலிம் சவ்வும்
வேறு தியானம்
ஓம் மூலாதார தேவி சர்வவிக்ன வினாசன்.
ஓம் சர்வசத்தப் பரியிலினி.
ஓம் சர்வசித்திகரனி.
ஓம் வல்ணபை நமஹா.
கன்னிகா மாதத்தில் பூர்வ பசஷத்தில் பிரதமையன்று சத்திபூசை தொடங்கவும் நவராத்திரி ஆரம்பத்தில் யந்திர திரு மேனியில் மேல்வாசல் நிருவப்பட்டிருக்கும் வினாயக பகவான் திருமுன்பிலமர்ந்து தேங்காய் பழம் வெற்றிலை பாக்குடன் படைத்து அருகம்புல்லால் மந்திரத்தை 108 உரு ஜெபித்து என்னுடைய பூஜைக்கு விக்கினமின்றி யனுக் கிரகிக்க வேண்டுமென்று பிரார்த்தித்து முதலாவது பிள்ளையார் திருவருட்பிரசாதம் பெற்றுக் கொண்டு அப்பால் வடக்கு வாசல் வந்து வல்லமை தியானம் செய்ய அஷ்டமாசித்துகளும் கை கூடும் (அகத்தியர் அஷ்டமாசித்தி.(1500ல்)கூறியது
தொழுகண்ணி
Author: Sabtharishi /துண்டிக்கப்பட்ட பாகத்தை ஒட்டவைக்கும் சக்தியுடைய இம் மூலிகைக்கு இது சனப்ப இலையைப் போன்ற இலையையுடையது. இதைத் தொட்டவுடன் பக்க இலையுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டு கை கூப்புவது போன்று இருப்பதால் இதற்குத் தொழுகண்ணி என்னும் பெயர். இது ஒரு முழ உயரம் உள்ள இச்செடி அந்தி மல்லிகைச் செடியை போலவே இருக்கும். இதை முறைப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து. அணி வேர் அறாமல் தோண்டி எடுத்து வந்து நிழலில் உலர்த்தி இடித்துத் தூள் செய்து துணியில் வஸ்திரகாயம் செய்து ஒரு சீசாவில் பதனம் செய்யவும். இதைக் காலை.மாலை இரு வேளையும் திரிகடி பிரமாணம் தேனில் குழைத்து நாற்பது நாட்கள் சாப்பிட்டால் சகல நோயும் தீர்ந்து காயசித்தியாகும் நரை திரை மாறும் பதினாறுவயது குமரனாகவும் மதயாயைப் போன்ற வலிமையும் பெறுவதுடன் துண்டு துண்டாக வெட்டினாலும் ஒன்று கூடும். உயிர் போகாது என காலாங்கிநாதர் மலைவளம் என்னும் நூலில் சொல்லப்பட்டு இருக்கிறது இதன் வடக்குப்போகும் வேரைக் கொண்டுவந்து தங்கத் தாயத்தில் அடைத்து வலது புஜத்தில் கட்டிக் கொண்டால் சகல காரியம் சித்தியாகும்.வியாபாரம்.தொழில்.விவகாரம் முதலிய எல்லா காரியமும் கைகூடும்.இதற்குப் பூஜை செய்து அணியவும்
Search This Blog
Pages
அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?
3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...