தங்க நிரம் மாறும் ரசணிகள்.

Author: Sabtharishi /

ரசமணி என்பது 




பாதரசத்தை மணி போல உருட்டி கட்டுவது. ஆதியில் இருந்து இன்று வரையிலும் சொல்லப்படுகின்ற ஒரு கருத்து நீர்ம நிலையில் உள்ள பாதரசத்தை கட்டியாக மாற்ற இயலாது என்பதே. ஆனால் தமிழகத்தில் வாழ்ந்த சித்தர் பெருமக்கள் பாதரசத்தை மணியாக கட்டி சாதனை புரிந்தனர். இதற்காக உலகமே சித்தர்களை பாராட்டவேண்டும். ஆனால் அதை இன்றைய போலி சித்தர்களும் தெரிந்து கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபடுவது வருந்த கூடிய செய்தி.

ரசமணி வகைகள் :

நான் ரசமணியை கற்றுகொண்ட போது ரசமணி பற்றி எனக்கு போதித்த சில செய்திகளை எழுதுகிறேன். ரசமணிகளில் முழுக்க முழுக்க மூலிகை சாற்றினாலோ, அல்லது துருசு (மயில் துத்தம்) மற்றும் மூலிகை சாறு பயன்படுத்தியோ அல்லது செயநீர்கள் தயாரித்தோ அல்லது எலி, அட்டை, மண்புழு போன்றவைகளை கொண்டும் செய்யப்படுகின்றது. இங்கு கடைகளில் காணப்படும் ரசமணிகள் அனைத்தும் வெள்ளியம் கலந்த ரசமணியாக, மயில் துத்ததை கொண்டு செய்யப்படும் ரசமணியாக மற்றும் வெறும் மூலிகை சாற்றினால் செய்யப்படும் ரசமணியாக இருகின்றன.

ரசமணி இரண்டு வகைப்படும்.

1. நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி.

2. நெருப்புக்கு ஓடாமல் நிக்கும் ரசமணி

நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி :

மயில் துத்ததை கொண்டு செய்யப்படும் ரசமணிகள், வெறும் மூலிகைகள் கொண்டு செய்யப்படும் ரசமணிகள் ஆகியவை நெருப்புக்கு நிக்காமல் ஓடும் ரசமணிகள். அதாவது பாதரசத்தை மேல் சொன்னபடி மயில் துத்தம் கொண்டோ அல்லது வெறும் மூலிகைகள் கொண்டோ ஏதாவது ஒரு முறையில் மணியாக கட்டி பின்பு அதை ஒரு இரும்பு உருக்கு களத்தில் வைத்து உருக்கும் போது அவை உருகி நிற்குமே தவிர, மீண்டும் மணியாக வராது. அதாவது மற்ற உலோகத்தை போல தானாகவே இறுகாமல் நீர்ம நிலையிலே இருக்கும். இவைகள் நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணி ஆகும்.

வெள்ளியம் கலந்த ரசமணி :

வெள்ளியம் கலந்த ரசமணி அடிப்படை ரசமணிகளில் ஒன்று. கடைகளிலும், கோவில் திருவிழாக்களிலும் விற்கப்படும் ரசமணிகள் வெள்ளியத்துடன் பாதரசம் கலந்த ரசமணிகளே பெரும்பாலும் அதிகம் விற்கப்படுகிறது.

வெள்ளியம் கலந்த ரசமணி செய்முறை :

40% வெள்ளியத்தை ஒரு இரும்பு கரண்டியில் வைத்து உருக்கி அதில் 60% பாதரசத்தை ஊற்றினால் அவை வெள்ளியத்துடன் இறுகி ரசமணியாக மாறுகிறது. இதுதான் கடைகளில் அதிகம் விற்கப்படுகிறது. இதன் அளவு இப்படிதான் இருக்கவேண்டும் என்று இல்லை. நம் வசதிக்கு ஏற்ப வெள்ளியத்தை குறைத்து பாதரசத்தின் அளவை கூட்டிக்கொள்ளலாம். இதே போல வெள்ளியிலும் செய்யலாம். இது எனக்கு சொல்லப்பட்ட முதல் ரசமணி. வியாபார நோக்கதிற்காக இத்தகைய ரசமணிகள் உருவாக்கப்படுகின்றன.இதன் விலை 150 முதல் 300 வரை இருக்கும். வெள்ளியம் என்ற உலோகம் சல்ரிங் செய்ய பயன்படும் உலோகம் ஆகும். அதைகொண்டு செய்யலாம். இதில் சித்தர்கள் சொன்ன இயல்பான சக்தி உண்டே தவிர புதிய சக்திகள் ஏற்ற முடியாது.

சித்தர்களின் ரசமணி :

சித்தர்களின் ரசமணி என்பது நெருப்புக்கு நிற்காமல் ஓடும் ரசமணிகளில் ஒன்று. அதன் செய்முறையை காணலாம்.

சித்தர்களின் ரசமணி :

ரசமணி செய்முறைகளில் எளிமையான முறைகளில் ஒன்று சித்த ரசமணி. இதற்க்கு விராலி என்ற மூலிகை தேவை மற்றும் துருசு சுண்ணம் தேவை.

ஒரு பாத்திரத்தில் விராலியிலையை நறுக்கி அதில் துருசு சுண்ணத்தை போட்டு மூடிவைத்து விடவேண்டும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் அதில் அந்த மூலிகையின் சாறு இறங்கி இருக்கும். அந்த சாறை ஒரு இரும்பு கரண்டியில் ஊற்றி, அதற்குள் தேவையான பாதரசத்தை ஊற்றி, எரியும் தீயில் அந்த இரும்பு கரண்டியை வைக்க, அதில் உள்ள பாதரசம் கட்டும். தேவையான மட்டும் உருட்டிக்கொள்ளலாம். இதற்க்கு தேவையான சக்திகளை ஏற்றலாம். இது ரசமணியே அன்றி, குளிகை அல்ல. இப்படி செய்கின்ற ரசமணியின் விலை அதிகமாக இருக்கும்.

நெருப்புக்கு ஓடாத ரசமணி :

நெருப்புக்கு ஓடாத ரசமணி என்பது கட்டிய ரசமணியை ஒரு இரும்பு கரண்டியில் வைத்து உருக்கும் போது உருகி பின்பு தானாகவே கட்டியாக மாறி விடும். இத்தகைய ரசமணிகள்தான் ரசவாதத்திற்கு உதவும். இதில் இருந்துதான் ரசவாத தங்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.ஆனால் இதை யாரிடமாவது கேட்டாலும் செய்துதருவது அரிது. இதை செய்வதற்கு செலவும் அதிகம். இதில் இருந்துதான் ரசமணி குளிகைகள் செய்ய முடியும். இப்படி செய்கின்ற ரசமணிகளுக்கு மட்டுமே நவபாசாணங்களான 9 வகையான பாசணங்கள், நவரத்தினகற்களான  9வகையான மணிகற்கள் , நவமூலிகைகளான 9 வகையான மூலிகைகள், மேலும் 64 வகையான உபரசங்கள் ஆகியவற்றை கொண்டு தனித்தனியாக சாரணை செய்ய சக்தி உள்ள ரசமணி குளிகையாக மாறும்.

ராஜயோகம் தரும் ரசமணி நன்மைகள்

Call. +91 9626113916 


சித்தர்கள் உருவாக்கிய அற்புதமான ரசமணிகள், மனித வாழ்க்கையை மேம்படுத்தும் ரசமணி அணிவதால் ஏற்படும் நன்மைகள்

வெறும் வைத்தித்தோடு நில்லாமல் யோகம், ஞானம் மார்க்கத்திலும்  சிறந்தவர்களாக திகழ்ந்தார்கள்.  இவர்கள் கண்டறிந்த உலோகமாற்று இன்று வரை யாராலும் அவிழ்க்க முடியாத பரம ரகசியம். மிக சாதாரண உலோகங்களை தங்கங்களாக மாற்றும் வித்தை. இதை ரசவாதம் என்பார்கள்.

இந்த சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதான் இரசமணி. சித்தர்கள் ஒரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு செல்ல இரசக்குளிகை என்னும் இரசமணியை பயன்படுத்தினார்களாம்.

முறையாக செய்யப்பட்ட இரசமணியை மந்திர ஜெபயங்கள் உருவேற்றி வைத்திருப்பார்கள். வேறிடம் செல்ல நினைக்கும் போது, இந்த இரசமணியை வாயில் போட்டுக் கொண்டால் காற்றில் பறக்கும் சக்தி அவர்களுக்கு வந்துவிடும். இந்த முறையில்தான் போகர் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்றாக கோரக்க சித்தர் சொல்கிறார்.

மந்திர சித்திபெற நாம் மகான்கள் அல்ல, யோகிகளோ, ஞானிகளோ அல்ல. சித்தர்களும் அல்ல. சாதாரண மனிதர்கள். பந்தபாசம் அற்றவர்களுக்கும், பணத்தாசை இல்லாதவர்களுக்கும் மட்டுமே மந்திர சித்தி கிடைக்கும். ஆனால் மருத்துவப் பயன்கள் எண்ணில் அடங்கா.

மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது. இம்மூன்றும் சமமாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த சமநிலை கெடும்பபோது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

வாதம் என்பது நம் உடல் வளர்ச்சிக்கு உரிய வாயு. பித்தம் என்பது உடல் நம் உடலில் தங்கி இருப்பதற்கு உரிய வெப்பத்தை தருவது, கபம் என்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவது. இம் மூன்றும் கூடினாலும், குறைந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்டும்.

அந்த வகையில் வாதம் கூடி குறைந்தால் 1482 வியாதிகளும், பித்தம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும், கபம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும் தோன்றுமாம். இதை சமநிலைப்படுவதுதான் இரசமணி.

இரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு.

உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இரசமணியை அணிந்துகொண்டால்  சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது.  சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.

விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.

பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.

செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும்.

நியாயமான வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.

வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை இரசமணிக்கு நிச்சயம் உண்டு.

ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

இப்படி இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திரவ நிலையில் இருக்கும் பாதரசத்தை மூலிகை சாறுகளால் சுத்தி செய்து, அதே மூலிகை சாற்றால் திடப் பொருளாக மாற்றி, மருத்துவ குணமாகக்கி அணிந்து கொள்வதுதான் இரசமணி.

இரமணியை வைத்துக் கொண்டு அஷ்டமா சித்துக்களும் ஆடலாம் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் அந்த சூட்சும திறவுகோலை அவர்கள் விளக்கவில்லை. விளக்கியவைகளும்  புரியும் நிலையில் இல்லை. ஒருவேளை கலியுகத்திற்கு இது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.

நமக்கு அஷ்டமா சித்திகள் கை கூடா விட்டாலும் ஆரோக்கியம் கூடினால், நோயற்ற வாழ்வு அமைந்து விட்டால், எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டால் போதும். அதற்கு இந்த இரசமணிகள் பெரிதும் உதவுகிறது.







0 comments:

Post a Comment

Search This Blog

Pages

அதிகம் பகிருங்கள் மூன்று நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா?

3 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? share இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட...